For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது நிச்சயம் நடக்கும்.. எடப்பாடி அரசு குறித்து தினகரன் புதுத் தகவல்

காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று டி.டி.வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடி அரசு குறித்து தினகரன் புதுத் தகவல்-வீடியோ

    சென்னை: காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு இரட்டை வேடம் போடுகிறது. விரைவில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டவே மக்கள் விரும்புகிறார்கள் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளரும், ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

    TTV Dhinakaran slams Edappadi Government on Cauvery issue

    அப்போது அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இரட்டை வேடம் போடுகிறது. உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமலும், அதே நேரம் நாளிதழ்களில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் பேசும் போக்கு மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    விரைவில் இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். அது நிச்சயம் நடக்கும். 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கில், நாங்களும் மேல்முறையீடு செய்வோம்.

    கர்நாடகா தொடர்ந்து காவிரி நீர் கொடுக்க மறுத்து வரும் சூழலில், அங்கு நடக்கும் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    TTV Dhinakaran slams Edappadi Government on Cauvery issue. AMMK Deputy General Secretary TTV Dhinakaran says that, Soon TN Government is to be Removed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X