குறுக்கு வழியில் பெரும்பான்மையை காட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: டிடிவி தினகரன் கண்டனம்
குறுக்கு வழியில் பெரும்பான்மையை காட்ட எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: குறுக்கு வழியில் பெரும்பான்மையை காட்ட எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவருகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். குறுக்கு வழியில் பெரும்பான்மையை காட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சபாநாயகர் தனபால் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிமன்ற அனுமதியோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வோம் என்றும் டிடிவி தினகரன் கூறினார். மேலும் துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.