எடப்பாடி பழனிச்சாமியை தமிழகம் மன்னிக்காது.. டிடிவி தினகரன் காட்டம்!
அதிமுகவின் ஆணிவேரான தொண்டர்களை அசைத்துப் பார்க்க முயற்சித்தால் தமிழகம் நிச்சயம் உங்களை மன்னிக்காது என்று முதல்வர் பழனிசாமிக்கு டிடிவி. தினகரன் காட்டமாகக் கூறியுள்ளார்.
சென்னை: ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் பழனிச்சாமி அரசை வன்மையாக கண்டிப்பதாக டிடிவி. தினகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலாவை நீக்கி நேற்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து தமிழகத்தின் சலி பகுதிகளில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உருவபொம்மையை எறிக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தனது ஆரவாளர்கள் கைது குறித்து டுவிட்டர் டிடிவி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: நேற்று துரோகிகள் ஒன்று கூடி பொதுக்குழு என்ற பெயரில் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக, எதிராக ஒரு கூட்டத்தை கூட்டி சின்னம்மாவை பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். காவல்துறையை ஏவி உண்மை தொண்டர்களை கைது செய்து வருகின்றனர்.
அதிமுகவின் ஆணிவேரான தொண்டர்களை அசைத்து பார்க்க முயற்சித்தால் தமிழகம் நிச்சயம் உங்களை மன்னிக்காது. கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 13, 2017
இதனைக் கேட்டு கொதித்தெழுந்த கழகத்தின் உண்மை தொண்டர்கள் தமிழகம் முழுவதும் துரோகிகள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மைகளை கொளுத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அதிமுகவின் ஆணிவேரான தொண்டர்களை அசைத்து பார்க்க முயற்சித்தால் தமிழகம் நிச்சயம் உங்களை மன்னிக்காது.
ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் பழனிச்சாமி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 13, 2017
கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் பழனிச்சாமி அரசை வன்மையாக கண்டிக்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications