அமைச்சர் ஜெயக்குமார் "பஃபூன்" மாதிரி பேசிக் கொண்டிருப்பார்... தினகரன் விமர்சனம்!
அமைச்சர் ஜெயக்குமார் பஃபூன் மாதிரி பேசிக் கொண்டிருப்பார் என தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.
நெல்லை: அமைச்சர் ஜெயக்குமாரை பஃபூன் என்று கடுமையாக சாடி பேட்டி கொடுத்துள்ளார் டிடிவி தினகரன்.
நெல்லையில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுடன் பேசியதாவது : நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் அறிவித்த போராட்டம் குறித்து சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
ஆளுநரை சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆதரவை திரும்பப்பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளோம். ஆளுநர் பொறுத்திருக்கச் சொல்லியிருக்கிறார், நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கிறோம். ஜனநாயக நாட்டில் எதையுமே பொருத்திருந்து தான் பெற முடியும்.

முதல்வரை மாற்ற வேண்டும்
என்னை விட்டுவிட்டு 21 பேருடனும் எதிர்அணியினர் பேசுவார்கள். அமைச்சர் ஜெயகுமார் பஃபூன் போல ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார், முதல்வரை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. எங்கள் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள், தொகுதி மக்களுடனும் அவர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

மக்கள் எதிராக உள்ளனர்
அமைச்சர்களுக்கு எதிராக மக்களும், தொண்டர்களும் உள்ளனர். அனிதா மரணத்திற்கு இவர்களால் செல்ல முடியவில்லை இதில் இருந்தே அவர்கள் மீது மக்கள் எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது தெரியும்.

கட்சியிலே துரோகிகள்
யாரை முதல்வராக்கினோமோ அவரே கட்சிக்குத் துரோகம் செய்யும் போது அடுத்தவர்களை குறை சொல்வது தவறு. அமைச்சர்களே கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு பதவி இருந்தால் போதும் என்று இருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது மற்றவர்களால் தான் அவர்கள் கெட்டுவிட்டார்கள் என்று சொல்வது தவறு.

பணம் பாய்ந்துள்ளது
கடந்த 4 மாதமாக ஜக்கையன் எங்களுடன் தான் இருந்தார். அவருடைய திடீர் மனமாற்றம் என்னவென்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications