அதாவது வைகைச் செல்வன் என்ன சொல்றாருன்னா.. தினகரன் "பாகுபலி" ஆயிட்டாருன்னு சொல்றாரு!
டிடிவி.தினகரன் நான் அதிமுகவில் இருந்த ஏற்கனவே ஒதுங்கிவிட்டேன் என்று கூறியதன் மூலம் டிடிவி.தினகரன் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார் என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி.தினகரன் நான் அதிமுகவில் இருந்த ஏற்கனவே ஒதுங்கிவிட்டேன் என்று கூறியதன் மூலம் டிடிவி.தினகரன் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார் என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனின் உயர்ந்த நற்பண்பு இதன் மூலம் வெளிப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
சசிகலா குடும்பத்தினரை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அதிமுக அம்மா அணியின் அமைச்சர்கள் நேற்று முன்தினம் இரவு அறிவித்தனர். டிடிவி தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரால் அதிமுகவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்,
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன் அதிமுகவில் இருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன் அதாவது செவ்வாய்க்கிழமை இரவே ஒதுங்கிவிட்டேன் என அவர் கூறினார். மேலும் அமைச்சர்கள் என்னிடம் கூறியிருந்தால் நானே அதிமுகவில் இருந்து விலகியிருப்பேன் என்றும் கூறினார்.

நன்றி தெரிவித்த தினகரன்
கட்சியில் பிளவு ஏற்பட தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும், நான் விலகினால் கட்சிக்கு நல்லது நடக்கும் என்றால் நடக்கட்டும் என்றும் அவர் கூறினார். மேலும் தனக்கு ஆதரவளித்த அமைச்சர்களுக்கு டிடிவி தினகரன் நன்றியும் தெரிவித்தார்.

உயர்ந்து நிற்கிறார்
அவரது இந்த முதிர்ச்சியான பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக அம்மா அணியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் ஏற்கனவே கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன் என கூறியதன் மூலம் மக்கள் மனதில் டிடிவி.தினகரன் உயர்ந்து நிற்கிறார் என்றார்.

மக்கள் மனதில் இருப்பார்
மேலும் அமைச்சர்கள் என்னிடம் கூறியிருந்தால் நானே விலகியிருப்பேன் என்று அவர் கூறியிருப்பதன் மூலம் அவரது நற்பண்பு வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கட்சி நலனுக்காக டிடிவி தினகரன் ஒதுங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் என்றும் மக்க்ள மனதில் இருப்பார் என்றும் வைகைச்செல்வன் கூறினார்.

அதிமுகவில் வெற்றிடம்
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும் சசிகலாவின் சிறைவாசத்துக்குப் பிறகும் அதிமுகவில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது சசிகலாவின் குடும்பத்தினர் இல்லாமல் அதிமுகவில் ஒரு வெற்றிடம் ஏற்படும் என்றும் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications