தினகரன் ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகம் வருகை.. இவர்கள்தான் "ஸ்லீப்பர் செல்களா"??
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இன்று இணையும் என்ற எதிர்பார்ப்பில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த இடத்தில் டிடிவி தினகரனால் நியமிக்கப்பட்டவர்களும் வந்துள்ளதால் பரபரப்பு
Recommended Video

சென்னை: ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவு தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ள நேரத்தில் தினகரன் ஆதரவாளர்கள் சிலரும் வந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தனித்தனியே நடைபெற்றன. இன்று இணைப்பு ஏற்பட்டு, புதிய அமைச்சரவையும் பதவி ஏற்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பை எதிர்பார்த்து அதிமுக தொண்டர்கள், சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இதனால் இங்குப் பாதுகாப்பிற்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனால் நியமிக்கப்பட்டவர்களும் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். அமைப்பு செயலாளராக தினகரனால் நியமிக்கப்பட்ட மாதவரம் மூர்த்தி, டிகேஎன் சின்னய்யா உள்ளிட்டோர் தலைமை அலுவலகம் வந்துள்ளனர். இதனால் இங்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications