ஆர்.கே.நகரில் வீடு எடுத்து தங்கி பிரச்சாரம் - டிடிவி தினகரன் அறிவிப்பு
ஆர்கே.நகர் தொகுதியில் வீடு எடுத்து தங்கி பிரச்சாரம் செய்யப் போவதாக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் வீடு எடுத்து தங்கி பிரச்சாரம் செய்யப்போவதாக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் டிடிவி.தினகரன் தெரிவித்துத்துள்ளார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு சார்பில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். தொப்பி சின்னத்தில் போட்டியிடும் அவரின் வேட்பு மனு இன்று பெரும் இழுபறிக்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக அவர் கூறினார்.
தான் சட்டப்படி தான் ஆர்கே.நகரில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது வழக்குகள் போடப்பட்டன என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
பெரியகுளம் எம்பி தேர்தலின் போதும் திமுக தன்னை எதிர்த்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் ஆர்.கே.நகரில் வீடு எடுத்து தங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தினகரன் கூறிள்ளார்.