தூத்துக்குடி: பைக்குகளை தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்களால் பரபரப்பு
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் பைக்கை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். இதையடுத்து அவர்கள் பதிலுக்கு கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.

கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியபோதும், அதை எதிர்த்து மக்கள் முன்னேறினர். வஜ்ரா வாகனத்தை விரட்டியடித்தபடியே பொதுமக்கள் முன்னேறினர்.
இதனிடையே திருச்செந்தூர் சாலை பகுதியில், 3 டூவீலர்களை ஒன்றாக போட்டு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
போராட்டக்காரர்கள் இரு சக்கர வாகனங்களுக்கு, தீ வைத்தபோதிலும் போலீசாரால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டம் ஆவேசமாக இருப்பதால் போலீசார் அருகே வரவில்லை.












Click it and Unblock the Notifications