திமுக கவுன்சிலர் வார்டுக்கு "ஃப்ரீ" பொருட்கள் கிடையாது- அதிமுக எதிர்ப்பு: மக்கள் சாலைமறியல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வெற்றி பெற்ற வார்டுக்கு விலையில்லா, மிக்சி, கிரைண்டர் விநியோகம் செய்யக்கூடாது என அதிமுகவினர் தடுத்ததல் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி 2வது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் அரசின் இலவச பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. அதன் பொருட்டு இந்திரா நகரில் உள்ள ரேசன் கடையில் பயனாளிகளுக்கு டோக்கன்களை வருவாய் துறை அலுவலர்கள் வினியோகம் செய்தனர். இதை பெறுவதற்காக பொதுமக்கள் அங்கு அதிக அளவில் குவிந்தனர்.

2வது வார்டு கவுன்சிலர் கீதா முருகேசன் திமுகவை சேர்ந்தவர். என்பதால், அப்பகுதி அதிமுக பிரமுகர்கள் வினோத், சந்தனம் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு வந்து அதிகாரிகளிடம்,

பொருட்களை வினியோக்க கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைத்தனர்.

இந்நிலையில் அதிகாரிகள் டோக்கன் வினியோகிப்பதை நிறுத்தி விட்டு ரேசன் கடையை பூட்டி சென்றனர். இதனால் ஏமாற்றத்தால் கொதிப்படைந்த பொதுமக்கள் 2வது வார்டு கவுன்சிலர் கீதா முருகேசன் தலைமையில் திரண்டனர். 4ஆம் ரயில்வே கேட் சாலையில் திடீரென சாலை மறியலில் இறங்கினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த டவுன் டிஎஸ்பி கந்தசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். கீதா முருகேசன் உள்ளிட்ட சிலரை மட்டும் ரேசன் கடைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அப்போதும் அதிமுகவினர் குறுக்கிட்டு போலீசாரிடம் விவாதித்தனர்.

மேலும் திமுக கவுன்சிலரிடம் வாக்கு வாதமும் செய்தனர். இதையடுத்து போலீசார் வாக்குவாதம் செய்த அதிமுகவினரை எச்சரித்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+