Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி: பேத்தியின் தோழியை சீரழித்த 80 வயது காமுகன் கைது!

Subscribe to Oneindia Tamil

Tuticurin : Eight-year-old girl raped by 80 year man
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 8 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 80 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் வேல். இவருக்கு 5 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். 80 வயதான வேலின் பேத்தியின் வகுப்புத் தோழி, சுஜாதா (வயது 8, பெயர் மாற்றப்பட்டுள்ளது) முதியவர் வீட்டிற்கு விளையாட அடிக்கடி வருவாளாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் தோழியுடன் விளையாட வேலின் வீட்டிற்கு மாணவி சரிதா வந்துள்ளார்.

சிறுமியிடம் சில்மிஷம்

அப்போது, வீட்டில் தனியாக இருந்த வேல், சிறுமியை அழைத்து சென்று தனது மடியில் உட்கார வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆடைகளை களைய முற்பட்டதும் பயந்துபோன சரிதா, அழுது கத்தியிருக்கிறாள். சரிதாவின் வாயைப் பொத்தியபடி மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்ட வேல், இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதேபோல், தொடர்ந்து மாணவி சரிதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை பள்ளி வகுப்பு ஆசிரியையிடம், ‘‘தனக்கு மயக்கம் வருவதாகவும், பிறப்புறுப்பில் வலி இருப்பதாகவும்‘‘ சிறுமி சரிதா கூறி இருக்கிறாள். பள்ளியில் இருந்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள், சரிதாவை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டிருக்கிறார்கள். அப்போது சிறுமி சரிதா, தன் வகுப்பு தோழியின் தாத்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியதை கூறி இருக்கிறாள்.

இதையடுத்து, சரிதாவின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை காவல்துறையில் புகார் செய்திருக்கிறார்கள். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவரை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகரிக்கும் சம்பவம்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு சாக்லேட், பிஸ்கட் கொடுத்தும், பத்து, இருபது ரூபாய் கொடுத்தும் பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜார்ஜ் ரோடு பகுதியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இப்படி தூத்துக்குடியில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதால் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+