காலைத் தொட்டு கேட்கிறேன்.. தற்கொலை முடிவை யாரும் எடுக்காதீர்கள்... வேல்முருகன் #vignesh
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் காவிரி நதிநீர் உரிமையை மீட்க வலியுறுத்தியும் தீக்குளித்து மரணித்த விக்னேசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வீர வணக்கம் செலுத்துவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகாவில் தமிழர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டதைக் கண்டித்தும், காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாக மாறுவதை தடுத்து நிறுத்தக் கோரியும் தீ நாக்குகளுக்கு தம்மையே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி விக்னேசு தாரைவார்த்துக் கொடுத்த செய்தி பெருந்துயரத்தையும் வேதனயையும் தருகிறது.

தாய்மொழி காக்க, ஈழத் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த, பேரறிவாளன், முருகன், சாந்தன் உயிர் காக்க... தங்களது தேகங்களை தீக்கங்குகள் தின்ன கொடுத்து மடிந்த போராளிகள் வரிசையில் தம்பி விக்னேஷூம் இப்போது....
தம்பி விக்னேசுவின் கோரிக்கைகளும் கொள்கைகளும் உன்னதமானவை... அந்த கொள்கைகள் நிறைவேறும் வரை ஜனநாயக வழியிலான அறப்போராட்டங்களைத்தான் நாம் கையிலெடுக்க வேண்டும்.
ஆனால் இதுபோன்ற தம்மை தாமே அழித்துக் கொள்ளும் போராட்ட முறையை கிஞ்சித்தும் எமதருமை தமிழ் இளைஞர்களே சிந்துத்துவிடாதீர்கள்! உங்கள் இருபாதம் தொட்டு வேண்டுகிறேன்... உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் நாங்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான பலம்.... உங்களையெல்லாம் பறிகொடுத்துவிட்டா நாங்கள் போராடுவது?
மீண்டும் மீண்டும் எனதருமை தமிழ் இளைஞர்களே உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்... போதும் முத்துக்குமாரும், செங்கொடியும் விக்னேசும் போதும்... இனியும் உங்கள் உயிரை தீக்கு தாரைவார்த்துவிடாமல் திண்ணிய நெஞ்சுடன் தமிழர் தம் வாழ்வுரிமைக்கான போர்க்களத்தில் போராடுவோம் என அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications