மீத்தேன் எரிவாயு திட்டம் ரத்து அறிவிப்பு தி. வேல்முருகன் வரவேற்பு!
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு தி. வேல்முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிகமாக இருப்பதாக கூறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு மற்றும், நில கையகப்படுத்துதலில் நிலவிய குழப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, திட்டத்தை கைவிடுகிறோம். திட்டம் தொடர்பாக இனிமேல் ஆய்வுகளும் நடத்த மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி டெல்டா மாவட்டங்களில் கர்நாடகா மற்று மத்திய அரசின் துரோகத்தால் முப்போக சாகுபடி பொய்த்து போய்விட்டது. விவசாயம் பொய்த்துப் போன அதிர்ச்சியை தாங்க முடியாமல் விவசாயிகள் மரணமடைந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் காவிரி டெல்டா விளைநிலங்களைப் பாலைவனமாக்கும் வகையில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைந்தது. இந்த திட்டத்துக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், விவசாய அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.
தற்போது இப்போராட்டங்களுக்கு மதிப்பளித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
இதேபோல் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications