ட்விட்டரில் நடிகர், நடிகைகளின் ஆபாச படங்கள் ரிலீஸ் விவகாரம்- போலீசில் சுசித்ரா புகார்
தமது ட்விட்டர் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்து தவறாக பயன்படுத்துவதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.
சென்னை : தமது ட்விட்டர் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்து தவறாக பயன்படுத்துவதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா, அனிருத் ஆகியோரின் சர்ச்சைக்குரிய ஆபாச படங்கள் வெளியானது. இதனால் கோலிவுட்டே கதிகலங்கிபோனது.

ஆனால் சுசித்ராவோ தம்முடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதோடு நிற்காமல் தொடர்ந்து அந்த ட்விட்டர் பக்கத்தில் இருந்து நடிகர் , நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் , போட்டோக்கள் வெளியாகி வந்தன.
மேலும் ஒரு தனி பட்டியல் போட்டு பலரது வீடியோக்கள் வெளியாகும் எனவும் சுசித்ராவின் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ட்விட்டர் பக்கத்தில் இருந்தே சுதித்ரா வெளியேறினார். இதன் தொடர்ச்சியாக சுசித்ரா பெயரில் சமூக வலைதளங்களில் ஏராளமான பக்கங்களைத் தொடங்கியுள்ளனர் ஹேக்கர்கள்.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சுசித்ரா தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது பெயரை பயன்படுத்தி, அவதூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications