கனமழை பாதிப்பு: சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி செய்யும் நல்ல உள்ளங்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு மையங்களை அறிவித்துள்ளது. நகர் முழுக்க 15 இடங்களில் உள்ள இந்த மையங்களுக்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏராளமான நல்ல உள்ளங்கள் அவர்களின் வீட்டு தொலைபேசி எண்களை கொடுத்து எங்க வீட்டுக்கு வாங்க... நாங்க உதவி செய்யுறோம் என்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சென்னை வாசிகள் மழை பாதிக்கப்பட்டவர்களுக்கு வித்தியாசமான முறையில் உதவ முன்வந்தனர். சமூக வலைதளங்களில் தங்களுடைய தகவல்களை பதிவு செய்து உதவ தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களுடைய அத்தனை தகவல்களையும் ஒரு கூகுள் டாக்குமென்ட்டில் ஷேர் செய்துள்ளார்கள்.
சென்னையில் பல இடங்களில் மழை கொட்டி தீர்ப்பதால், மக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகள் இன்றி தவிப்பதால் சென்னையை சேர்ந்த மருத்துவர் விக்னேஷ் ராஜ் மற்றும் அவரது நண்பர்களும், அசோக் நகர், கே.கே.நகர், சைதாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்புக்கு: 044-23662705
திரையரங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இடமளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications