சென்னை ஐடிஐ மாணவர் கொலை சம்பவம்.. 2 பேர் கைது.. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
டிஐ மாணவன் கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து கொலைக்கான விசாரணையையும் அவர்களிடம் துவக்கியுள்ளனர்.
தாம்பரத்தை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சிவக்குமார். வயது 22. இவர் கிண்டியில் உள்ள ஐடிஐயில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிவக்குமாரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் மாணவர்கள் யாராவது வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று சிவக்குமாரை தேடும் முயற்சியில்கூட யாரும் ஈடுபடவில்லை. இது தொடர்பாக புகாரும் காவல்நிலையத்தில் அளிக்கவில்லை.
இந்த நிலையில் ஐடிஐ வளாகத்தின் உள்ளே மண்டிகிடந்த ஒரு புதருக்குள் உடலின் பல இடங்களில் கத்திகுத்து காயங்களுடன் கிடந்த ஒரு சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். பின்னர்தான் தெரிந்தது அது மாணவர் சிவக்குமார் என்று. இதையடுத்து சடலத்தை மீட்டிய போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? அவருக்கு யாராவது விரோதிகள் இருந்தார்களா? என்று சக மாணவர்களிடம் விசாரணை தொடங்கினர். அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் ஏராளமான மதுபான பாட்டில்கள் கிடந்தன. அதனால் நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பாரா அல்லது ஐடிஐ மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பாரா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை துவக்கினர்.
இந்நிலையில், சிவக்குமார் கொலை தொடர்பாக ஐடிஐ மாணவர்கள் மோகன், சதீஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்பின்னரே கொலைக்கான என்ன என முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications