திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் கார்கள் மோதல்- 4 பேர் பலி
திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் இரு கார்கள் மோதியதில் 4 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் இரு கார்கள் மோதியதில் 4 பேர் பலியாகிவிட்டனர்.
திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சித்தளந்தூர் அருகே எதிர் திசையில் மற்றொரு கார் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது இரு கார்களும் நேருக்கு நேர் மோதின. இதில் கார்கள் இரண்டும் அப்பளம் போல் நொறுங்கின.
இந்த விபத்தில் சிக்கி செந்தில்குமார், வெங்கடேசன், சரவணன் ஆகிய 3 பேர் பலியாகிவிட்டனர். காயமடைந்த மேலும் 3 பேர் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications