கோவை அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாளேயான பெண் குழந்தை கடத்தல்
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்தியது தொடர்பாக நான்கு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி ஜோதி என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை வியாழக்கிழமை திடீரென்று காணமால் போனது. இதனை கண்ட ஜோதி அதிர்ச்சி அடைந்தார்.

மருத்துவமனை நிர்வாகத்திடமும், போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்தபோது பிற்பகல் 1 மணி அளவில் ஒரு ஆணும், 3 பெண்களும் அந்த பெண் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து குழந்தையை கடத்திய அந்த 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடத்தப்பட்ட பெண் குழந்தை வெள்ளக்கிணறு பகுதியில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்து ராஜன், ஜோதி தம்பதியினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகன எண்ணைக் கொண்டு துப்பு துலங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிடிபட்ட நான்கு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தென்காசியில் குழந்தை கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications