தூங்கி வழிந்த டிரைவர்.. அன்னூர் அருகே மரத்தில் வேன் மோதி குழந்தை உட்பட 2 பேர் பலி!
ஊட்டிக்கு சுற்றுலா வேன் விபத்துக்குள்ளாகி 2 பேர் உயிரிழந்தனர்.
கோவை: ஊட்டிக்கு சுற்றுலா சென்ற வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சார்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வேன் மூலம் உதகைக்கு நேற்று சுற்றுலா செல்ல கிளம்பி சென்று கொண்டிருந்தனர்.

வேன் கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த புகளூர் என்ற இடத்தில் சென்று வந்துகொண்டிருந்தது. அப்போது வேன் ஓட்டுனர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் வேன் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் அதிவேகத்தில் மோதியது. இதில் வேனில் முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தை ரிஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மேலும் படுகாயம் அடைந்த 10 க்கும் மேற்பட்டோர் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சீனிவாசன் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வேன் மரத்தில் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications