பேச்சுவார்த்தை நடக்கிறது.. இரு அணிகளும் விரைவில் இணையும்: முதல்வர் திட்டவட்டம்
சென்னை: திருவாரூரில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவிரி மீட்புக்குழுவினர் கறுப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமியிடம், அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், "பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இரு அணிகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

பேச்சுவார்த்தை தாமதமாவதற்கு என்ன காரணம், மறுதரப்பு துணை முதல்வர் பதவி கேட்கிறதா என்ற நிருபர்கள் கேள்விகளுக்கு, "பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு உங்களுக்கே என்ன காரணம் என்பது தெரியும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications