For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை- வீட்டில் புகுந்து பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த இருவர் கைது

Google Oneindia Tamil News

கோவை: பெண் தொழிலாளியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் முதல் டிவிஷனை சேர்ந்தவர் பாப்பாத்தி (45). கூலித் தொழிலாளியான பாப்பாத்தி எஸ்டேட் குடியிருப்பில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த திங்களன்று மாலை பாப்பாத்தியின் வீட்டிற்குள் அதே எஸ்டேட்டை சேர்ந்த மூன்று பேர் உள்ளே நுழைந்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளனர்.

பாப்பாத்தியின் கூச்சலைக் கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடி வருவதற்குள் குற்றவாளிகள் தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து பாப்பாத்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த முடீஸ் போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கிருஷ்ணகுமார் (வயது-21), ரதீஷ்குமார் (வயது-21) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாகவுள்ள மூன்றாவது குற்றவாளியான சபரீஸ்வரனைப் போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
In Valparai of Coimbatore district, two persons were arrested for misbehaving with a woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X