நெல்லை அருகே அரசு பஸ் - கார் மோதல்... 2 பேர் பலி
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு பேருந்தும் காரும் மோதி மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சங்கர் மற்றும் புளியங்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் ஜீப் ஓட்டுநர் சுந்தர்ராஜ் ஆகியோர் ஒரு காரில் நெல்லைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை ஆசிரியர் வேல்முருகன் என்பவர் ஒட்டி வந்துள்ளார்.

அப்போது ஆலங்குளம் அருகே உள்ள சிவலார் குளம் விளக்கு அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, செங்கோட்டையில் இருந்து நாகர்கோவிலுக்கு பராமரிப்பு பணிக்காக அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேரூந்தை ஓட்டுநர் சண்முகசாமி என்பவர் ஓட்டி சென்றார்.

அப்போது சிவலார் குளம் விலக்கு அருகே பேருந்து சென்றபொழுது எதிபாராத விதமாக அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த சுந்தர்ராஜ், சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிய வேல் முருகன் காயத்துடன் உயிர்தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்த வேல்முருகனை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications