ராஜபாளையம்: தனியார் பஸ் கிணற்றில் கவிழ்ந்து 3 பேர் பலி… பலர் படுகாயம்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த கிணற்றில் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள். ஐற்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கோவையில் இருந்து ஆலங்குளம் நோக்கி ஜெயபாரத் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்றுஅதிகாலை ராஜபாளையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு சேத்தூர் வழியாக ஆலங்குளம் நோக்கி சுமார் 10பயனிகளேடு ஆலங்குளம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது சிவகிரியிலிருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்துக்கு வழி விடுவதற்காக தனியார் பேருந்து ஓட்டுனர் சின்ன சாமி பேருந்தை சடக்கென திருப்பியுள்ளார்.
அப்போது பேருந்து நிலை தடுமாறி தடுப்பு சுவர் சிறிதாக இருந்து 50அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.
சாலையில் சென்றவர்கள் தீயணைப்பு படையினருக்கும், ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு கிணற்றில் விழுந்தவர்களை மீட்க முயன்றனர்.
இந்த விபத்தில் ஓட்டுனர் சின்னசாமி,ஆலங்குளத்தை சேர்ந்த கணேசன்,பாவூர் சத்திரத்தை சார்ந்த சுதன் ஆகிய 3பெரும் சம்பவ இடத்தில் பலியாயினர்.மீதி 5பேர் காயம் அடைந்தனர்.அவர்களை உடனடியாக ராஜபாளையம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications