தேன்கனிக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி.. ஒருவர் படுகாயம்
லாரி கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Recommended Video
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேன்கனிக்கோட்டை மலைப்பகுதியில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 3 பேர் சென்று கொண்டிருந்தனர். குந்துக்கோட்டைக்கும், அஞ்செட்டிக்கும் இடையே உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியில் லாரி சென்ற போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அருகிலிருந்த பள்ளத்தில் குப்புற கவிழ்ந்தது. இதில் லாரி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த மற்றொருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டதுடன், உயிருக்கு போராடி கொண்டிருந்தவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுமதித்தனர். இதையடுத்து குப்புற பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.