தமிழக - கேரளா எல்லையில் பயங்கர விஷத்தன்மை கொண்ட 2 ராஜ நாகங்கள் பிடிபட்டன

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: தமிழக - கேரளா எல்லை பகுதியான ஆரியங்காவில் அதிக விஷமுள்ள 2 ராஜநாகங்கள் புதன்கிழமை பிடிபட்டன.

தமிழக - கேரள எல்லை பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அரியவகை உயிரினங்கள் ஏராளமாக வசித்தும், வாழ்ந்தும் வருகிறது. தற்போது கேரள மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் அங்கு வாழும் மிருகங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.

two King cobras caught from tamilnadu - kerala

இந்நிலையில், ஆரியங்காவு பகுதியில் உள்ள கரையாளர்தோட்டம், நாகமலை உள்ளிட்ட பகுதிகளில் தனியார் தோட்டங்களில் கிராம்பு பறிக்கும் பணிக்காக தொழிலாளர்கள் புதன்கிழமை சென்றனர். அப்போது, பாறைகளுக்கிடையே பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக தெரியவரவே அவர்கள் அலறியடித்து ஓடினர்.

தகவலின் பேரில் ஆரியங்காவு வனத் துறையினர் வந்து பார்த்தபோது, 2 ராஜநாகங்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வனத் துறையினர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, பாம்பு பிடிக்கும் நபரான வாவா சுரேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் வந்து, 18 அடி நீளமுள்ள, அதிக விஷம் கொண்ட 2 ராஜநாகங்களை எந்த ஆயுதமுமில்லாமல் இலாவகமாக கையால் பிடித்தார். அவற்றை சாக்குப் பையில் போட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+