எடப்பாடி அணியில் இருந்து எம்.பி.க்கள் செங்குட்டுவன், உதயகுமார் எஸ்கேப்- தினகரனுடன் சந்திப்பு!
எடப்பாடி அணி எம்.பிக்கள் செங்குட்டுவன், திண்டுக்கல் உதயகுமார் ஆகியோர் தினகரனை இன்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து எம்.பி.க்கள் செங்குட்டுவன், உதயகுமார் ஆகியோர் தினகரனை இன்று சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்து வெளிப்படையாக பேட்டியளித்து வருகின்றனர். அதேநேரத்தில் பெரும்பாலான எம்.பி.க்கள் அமைதி காத்து வந்தனர்.

அமைச்சரவை எதிர்பார்ப்பு
மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் எம்.பி.க்கள் சிலர் மிகவும் எதிர்பார்ப்புடன் லாபிகளில் ஈடுபட்டனர்.

ஏமாற்றத்தில் அதிமுக
ஆனால் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அதிமுகவுக்கு டாடா காட்டப்பட்டுவிட்டது. இதனால் அதிமுக பெரும் ஏமாற்றமடைந்தது.

இரண்டு எம்பிக்கள் தினகரனுடன் சந்திப்பு
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து எம்பிக்கள் அணி மாற தொடங்கிவிட்டனர். எம்.பிக்கள் செங்குட்டுவன் மற்றும் உதயகுமார் ஆகியோர் சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினர்.

எண்ணிக்கை அதிகரிக்கும்
இவர்களைத் தொடர்ந்து மேலும் பல எம்.பி.க்கள் தினகரனை சந்திக்க வருவார்கள் எனவும் கூறப்படுகிறது. தினகரன் தரப்புக்கு பலம் இருப்பதாக டெல்லி கருதுவதால் எடப்பாடி அணியுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications