Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்கே நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு: 2 கம்பெனி துணை ராணுவத்தினர் கூடுதலாக வரவழைப்பு..!

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்கே நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்கே நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆர்கே.நகர் தொகுதியில் இன்னும் ஒருவாரத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அரசியல் கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

Two more company of para military forces has come to RK Nagar for the security purpose

மேலும் தேர்தலை சீர்குலைக்க அதிமுக அம்மா கட்சியினர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நேர்மையாக தேர்தலை நடத்தவும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 8 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை மாநகர காவல்துறையுடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 25 குழுக்களாக பிரிந்து ஆர்கே.நகர் தொகுதியில் வீதிவீதியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக துணை ராணுவ வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+