ஆர்கே நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு: 2 கம்பெனி துணை ராணுவத்தினர் கூடுதலாக வரவழைப்பு..!
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்கே நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்கே நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆர்கே.நகர் தொகுதியில் இன்னும் ஒருவாரத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அரசியல் கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

மேலும் தேர்தலை சீர்குலைக்க அதிமுக அம்மா கட்சியினர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நேர்மையாக தேர்தலை நடத்தவும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 8 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை மாநகர காவல்துறையுடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 25 குழுக்களாக பிரிந்து ஆர்கே.நகர் தொகுதியில் வீதிவீதியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக துணை ராணுவ வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications