Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் சில்மிஷம்.. தட்டி கேட்ட நடத்துனருக்கு அடி உதை!!

சில்மிஷம் செய்தவர்களை தட்டி கேட்ட நடத்துனர் தாக்கப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெண்ணிடம் சில்மிஷம்.. தட்டி கேட்ட நடத்துனருக்கு அடி உதை!!-வீடியோ

    ஈரோடு: ஈரோடு அருகே அரசு பேருந்தில் பயணித்த பெண்களிடம் சில்மிசம் செய்ததை தட்டி கேட்ட பேருந்து நடத்துனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கஸ்பாபேட்டை, அவுல்பூந்துறை வழியாக எழுமாத்தூர் வரை செல்லும் 21-ம் எண் கொண்ட அரசு நகர பேருந்தில் கஸ்பாபேட்டையை சேர்நத மணி என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகின்றார்.

    two passengers who misbehaved with women in erode bus

    இந்நிலையில் நேற்று மாலையில் ஈரோட்டில் இருந்து எழுமாத்தூர் செல்லும்போது பேருந்தில் பயணித்த இரண்டு நபர்கள், பெண்கள் பயணம் செய்யும் பகுதியில் நின்று பெண்களிடம் சில்மிசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த நடத்துனர் மணி அந்த நபர்களை எச்சரித்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பேருந்து நடத்துனர் மணியை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த பேருந்து நடத்துனர் மணி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மாநகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+