தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரம்
ஏரல்: தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற மாணவரும், அவரை காப்பாற்ற சென்ற மினி பஸ் கிளீனரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் படித்து வருபவர் பிரதீஸ். இவர் பி.எஸ்.சி., இயற்பியல் படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணியளவில், தனது நண்பர்கள் 10 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார்.
அப்போது பெருக்கெடுத்து வந்த வெள்ள நீரில் பிரதீஸ் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்த அங்கிருந்த 20க்கும்மேற்பட்டோர் பிரதீசை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் வெள்ள நீரில் மாவிலிராஜ் என்பவரும் அடித்து செல்லப்பட்டார். மாவிலிராஜ் மினிபஸ் கிளீனராக உள்ளார். அவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஆற்றில் அதிக நீர் செல்வதாலும், இருள் சூழ்ந்துவிட்டதாலும், தற்போது இருவரது உடலை தற்போது மீட்க முடியாது என தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர். இன்று காலை அவர்களது உடலை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.