போலீசுக்கே போன் மூலம் டார்ச்சர்.... அசராமல் 800 முறைக்கும் மேல் போன் செய்த தில்லாலங்கடிகள்
கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 800 முறைக்கு மேல் போன் செய்து ஆபாசமாகப் பேசியவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கோவை: கோவை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் இருவர் போன் செய்து கெட்ட வார்த்தைகளில் பேசி, போலீஸையே துன்புறுத்தியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு பேர் கடந்த ஒன்றரை மாதங்களாக வெவ்வேறு போன் நம்பர்களில் இருந்து பேசியுள்ளனர். அவர்கள் ஆண் போலீசார் போன் எடுத்தாலும் கெட்ட வார்த்தைகளிலும், பெண் போலீஸார்ப் போன் எடுத்தால், ஆபாச வார்த்தைகளிலும் பேசியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட போலீசார், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் துணை கமிஷனர் லத்சுமி ஆகியோரிடம் புகார் அளித்தனர். கமிஷனர் அமல்ராஜ், இந்தப் புகாரை விசாரிக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனையடுத்து, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த இருவரையும் கைது செய்தனர்.
ஒருவர் வேடப்பட்டியைச் சேர்ந்த லேத் வேலை செய்யும் தொழிலாளி ஶ்ரீகாந்த். மற்றொருவர் ஒத்தக்கால் மணடபத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செல்வராஜ் என தெரியவந்தது.
இதில் ஶ்ரீகாந்த் 10 சிம்கார்டுகளிலிருந்து 650 முறையும், செல்வராஜ் அதேபோல் 10 சிம்கார்டுகளை மாற்றி 842 முறையும் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசியுள்ளனர்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications