சென்னையில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: உசிலம்பட்டியில் இருந்து சென்னைக்கு 8 கிலோ கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினாவில் காவல்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஆட்டோ ஒன்றை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில், 8 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
கடத்தி வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 2 பேரும் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்தது. மேலும், உசிலம்பட்டியில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்ததாகவும் சென்னை மாணவர்களுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications