For Daily Alerts
Just In
சென்னையில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
சென்னை: உசிலம்பட்டியில் இருந்து சென்னைக்கு 8 கிலோ கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினாவில் காவல்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஆட்டோ ஒன்றை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில், 8 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
கடத்தி வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 2 பேரும் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்தது. மேலும், உசிலம்பட்டியில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்ததாகவும் சென்னை மாணவர்களுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
The Chennai city police on Wednesday arrested two students for allegedly possessing 8kg of ganja, which they brought from Usilampatti to be sold to college students in the city.
Story first published: Thursday, December 5, 2013, 8:52 [IST]