கனமழை: மதுரை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் 2 ரயில்கள் நாளை ரத்து
சென்னை: கனமழை காரணமாக மதுரை, கன்னியாகுமரியிலிருந்து நாளை புறப்படும் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பால் ரயில்களை இயக்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை, கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கனமழை காரணமாக மதுரை ரயில் நிலையத்திலிருந்து நாளை இரவு 11.35 மணிக்கு புறப்படவேண்டிய மதுரை - மதுரை - சண்டீகர் / டெஹராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் எண் (12687) ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து நாளை மாலை 7.15 மணிக்கு புறப்படவேண்டிய கன்னியாகுமரி - நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் எண் (12641) ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது












Click it and Unblock the Notifications