சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேட்டுப்பட்டியில் பட்டாசு ஆலையொன்றில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்று ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே மேட்டுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையொன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பட்டாசு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தயார் செய்யும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர்.

மூலப்பொருள் கலவையைச் செய்து கொண்டிருக்கும் போது உராய்வு ஏற்பட்டதால் வெடி விபத்து நிகழ்ந்து வேல்முருகன், பெருமாள் ஆகிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த முத்துராமன் என்ற தொழிலாளி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தால் தொழிலாளர்கள் வேலை செய்த அறை இடிந்து தரை மட்டமானது.
இந்த விபத்துத் தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications