1000 மெகாவாட்டா.. நம்ப முடியலையே.. சந்தேகமா இருக்கே: உதயக்குமார்

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரம்பம் முதலே பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கும் வகையிலேயே கூடங்குளம் அணு உலையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இப்போது 1000 மெகாவாட் உற்பத்தி செய்திருப்பதாக கூறுகின்றனர். இவை எதுவுமே நம்பகத்தன்மையுடன் இல்லை.
சமீபத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த இருவர் கவலைக்கிடமாக சென்னை மருத்துவமனையில் உள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது என இதுவரை தெரிவிக்கவில்லை.
மேலும் 2013-ம் ஆண்டு முதல் 2014 மே மாதம் வரையிலும் அணுஉலை ஊழியர்களுக்கான மருத்துவ செலவு ரூ.5.2 கோடியாகும். பெரும்பாலும் கண் தொடர்பான உபாதைகளுக்கே சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த பாதிப்பு குறித்தும் ரகசியம் காத்து வருகின்றனர்.
வணிக ரீதியான உற்பத்தி குறித்து இதுவரை தெளிவுபடுத்தாமலேயே உள்ளனர். எனவே அணுஉலை செயல்பாடுகள் அனைத்துமே சந்தேகத்துக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications