கருணாநிதியின் இறப்பு தேசத்துக்கு பேரிழப்பாகும்- உம்மன் சாண்டி
கருணாநிதியின் இறப்பு தேசத்துக்கு பேரிழப்பாகும் என்று உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கருணாநிதியின் இறப்பு தேசத்துக்கு பேரிழப்பாகும் என்று கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கோபாலபுரத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். இன்றைய தினம் ராஜாஜி ஹாலில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில் கருணாநிதி என்னுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். கருணாநிதியின் இழப்பு தேசத்துக்கு பேரிழப்பாகும்.
கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் உம்மன் சாண்டி.












Click it and Unblock the Notifications