For Daily Alerts
Just In
தமிழகம் கலவர பூமியாகும்... மிரட்டும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!
இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மிரட்டல் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி: இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். இந்து அமைப்பினர் மீது தாக்குதலை நிறுத்த வேண்டும்.
இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நீடித்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
Comments
English summary
Union Minister Pon Radha Krishnan has threatened that, if attacking of Hindu outfit leaders continue, TamilNadu will face riots.