கூடங்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைகள் 2020க்குள் சாத்தியம் – மத்திய அரசு உறுதி
நெல்லை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 3 ஆவது மற்றும் 4 ஆவது அணு உலைகள் வருகின்ற 2020 ஆண்டில் இருந்து செயல்படத் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷியா ஆதரவுடன் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு உள்ளது.
இங்கு தலா 1000 மெகாவாட் திறனுள்ள 2 உலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு மேலும் 2 உலைகள் அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

அணுசக்திதுறை அமைச்சர் பதில்:
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார்.

இரண்டு புதிய அணு உலைகள்:
கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் திறனுள்ள 3 மற்றும் 4 ஆவது அணு உலைகள் அமைக்கும் திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது.

அனுமதிகளும் தயார்:
இந்த திட்டத்துக்காக அனைத்து சட்ட ரீதியான அனுமதிகளும் பெறப்பட்டு உள்ளன. மேலும் இந்த 2 உலைகளின் கட்டுமான பணிகளுக்காக இடம் தயார் நிலையில் உள்ளது.

2016 இல் தொடக்கம்:
இந்த உலைகள் அமைக்கும் பணிகளை அடுத்த ஆண்டு அல்லது 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

2020 ஆம் ஆண்டில் செயல்படும்:
பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் இந்த 3 மற்றும் 4 ஆவது அணு உலைகளை 2020 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications