கார்கள் மீது கல்லெறிந்து கண்ணாடிகளை உடைக்கும் மர்ம நபர்கள்... அச்சத்தில் மக்கள்! - வீடியோ

புதுச்சேரி முதலியார்பேட்டை, நைனார் மண்டபம்பகுதிகளில் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கார்கள் மீது மர்மநபர்கள் கற்களை வீசி கண்ணாடியை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்திலுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் கார்களை மர்மநபர்கள் கல்லால் அடித்து, கண்ணாடிகளை உடைத்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டை, நைனார் மண்டபம் ஆகிய பகுதிகளில் மக்கள்வாசலில் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். காலையில் எழுந்து பார்த்த போது அந்த கார்களின் கண்ணாடிகள் எல்லாம் உடைந்து சிதறிக் கிடந்தது.

 Unknown persons breaking car by throwing stone in Puducherry

அப்பகுதியில் இரவு நேரத்தில், மர்ம நபர்கள் கற்களை வீசி கார் கண்ணாடியை உடைப்பது தெரியவந்தது. கார் உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்ததையடுத்து, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கார் உடைப்பு சம்பவத்தால் அப்பக்குதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தி வந்த சம்பவம் நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+