எதிர்க்கட்சி அந்தஸ்துக்காக தாஜா.. 3 தென்மாநில ஆளுநர்களை ராஜினாமா செய்ய சோனியா உத்தரவு!!
சென்னை: தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் ஆளுநர்களை உடனடியாக ராஜினாமா செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்காகவே காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மன்மோகன் சிங் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை மாற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது. ஆளுநர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்ய உள்துறை செயலர் கோஸ்வாமி வலியுறுத்தியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மத்திய அரசின் நிர்பந்தத்தை அடுத்து முதலில் உத்தரபிரதேச ஆளுநர் பி.எல். ஜோஷி ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து சத்தீஷ்கார் மாநில ஆளுநர் சேகர் தத் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

மத்திய அரசு நெருக்கடி
தாங்களாகவே விலகாத ஆளுநர்களுக்கு மத்திய அரசு நெருக்கடி தந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை கடும் நெருக்கடியை அளித்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

5 மாநில ஆளுநர்களுக்கு நெருக்கடி
மேலும் மேற்குவங்கம், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய 5 மாநில ஆளுநர்களையும் பதவி விலக வலியுறுத்துகிறது மத்திய அரசு.

விலக மறுப்பு
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்பது கேரள ஆளுநர் ஷீலாதீட்சித் முடிவாகும். அஸ்ஸாம் மாநில ஆளுநர் பட்நாயக், கர்நாடகா மாநில ஆளுநர் பரத்வாஜ் ஆகியோரும் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர்.

காங்கிரஸ் அதிரடி முடிவு
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரோசய்யா, கேரளாவின் ஷீலா தீட்சித், கர்நாடகாவின் பரத்வாஜ் ஆகியோரை உடனே ராஜினாமா செய்யுமாறு திடீர் என உத்தரவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இம் மூன்று பேரும் எந்நேரத்திலும் தங்களது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றத்திற்கு காரணம் என்ன?
காங்கிரஸின் இந்த திடீர் நிலைப்பாட்டுக்கு காரணமாக சொல்லப்படுவது எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பதவிதான் என்று கூறப்படுகிறது. அதாவது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற முடியாமல் போராடி வருகிறது காங்கிரஸ்.

எதிர்கட்சி அந்தஸ்து
எனினும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்குமாறு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியதாக கூறப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி
எதிர்க்கட்சி அந்தஸ்தை கருத்தில் கொண்டு ஆளுநர்கள் விசயத்தில், மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது என்று கருதிய சோனியா காந்தி, ஆளுநர்களை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications