வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து.. தலைமறைவாக இருந்த கட்டிட உரிமையாளர் கைது

வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து வழக்கு தொடர்பாக அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த மே 8 ஆம் தேதி தீ விபத்து நிகழ்ந்தில் 4 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

vadapalani fire accident, building owner arrested

சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த மே 8 ஆம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ அங்கிருந்த வீடுகளுக்கும் வேகமாக பரவியது.

vadapalani fire accident, building owner arrested

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி, சஞ்சய், செந்தில், சந்தியா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 20 இருசக்கர வாகனங்கள் கருகின.

இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கட்டடிடத்தின் உரிமையாளர் விஜயகுமாரை வடபழனி போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். விஜயகுமார் அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+