For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று பகலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைகோ இன்று பகல் 12 மணியளவில் சென்னையில் இருந்து கடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் அருகே சென்றபோது வைகோவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் லேசான மயக்கமும் ஏற்பட்டதால் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு அவரது உதவியாளர் தகவல் தெரிவித்தார்.

Vaiko admitted at Chennai hospital

அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன் புறப்பட்டு வந்தது. வைகோ சென்ற கார் கோவளம் சுங்கச்சாவடியில் நின்றது. அங்கு வந்த ஆம்புலன்சில் வைகோவை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். வைகோவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது'' என்று கூறியுள்ளனர்.

வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தொண்டர்களிடம் பரவியது. ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

English summary
MDMK leader Vaiko admitted the Chettinadu Hospitals in Chennai for a health check-up, creating a buzz and rumours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X