எச். ராஜாவுக்கு எதிரான எச்செயல்களிலும் மதிமுகவினர் ஈடுபடக்கூடாது - வைகோ உத்தரவு
சென்னை: எச் ராஜாவுக்கு எதிரான எச்செயல்களிலும் மதிமுகவினர் ஈடுபடக் கூடாது. அப்படி யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக சார்பில் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழர்களுக்கு விரோதமான கருத்துக்களையோ, செயல்களையோ செய்யும் கட்சித் தலைவர்களை விமர்சிக்க ஒரு போதும் தயங்காதவர் வைகோ. வைகோ அவர்களின் விமர்சனங்களை மாற்றுக் கட்சி தலைவர்கள் ஒரு போதும் விமர்சனம் செய்யாத நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா, வைகோ இனி தமிழக வீதிகளில் நடமாட முடியாது என்று ஆவேசமாக பேசியுள்ளதை அறிந்த ம.தி.மு.க தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில், எச். ராஜாவுக்கு எதிரான எச்செயல்களிலும் ம.தி.மு.க தோழர்கள் ஈடுபடக்கூடாது என்று தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். அதையும் மீறி செயல்படும் தோழர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் வைகோ அவர்கள் எச்சரித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.