நியூட்ரினோ ஆய்வு எதிர்ப்பு நடைப்பயணம்: மதுரை செக்கானூரணி 2-ம் நாள் பயணத்தை தொடங்கினார் வைகோ
நியூட்ரினோ ஆய்வு எதிர்ப்பு நடைப்பயணம் செக்கானூரணியில் இருந்து இரண்டாம் நாள் பயணத்தை வைகோ தொடங்கினார்.
மதுரை : தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விழிப்புணர்வு நடைபயணத்தை நேற்று துவக்கினார். அதன் இரண்டாம் நாளான இன்றும் மதுரை மாவட்டம் செக்கானூரணியில் இருந்து தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு எதிராக விழிப்பு உணர்வு நடைபயணத்தை நேற்று மதுரையில் துவங்கினார். அவருக்கு வழி நெடுகிலும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்வு அளித்தனர்.

மதுரையில் இருந்து விராட்டிபத்து, அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டை, கீழக்குயில்குடி காமராஜர் பல்கலைக்கழகம் வழியாக நேற்று இரவு வைகோ செக்கானூரணி சென்றடைந்தார். நேற்று இரவு செக்கானூரணியில் தங்கிய அவர், அங்கு நடந்த விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும், மதுரை கூட்டத்தில் சிவகாசியைச் சேர்ந்த கட்சி நிர்வாகி ரவி தீக்குளித்த சம்பவத்தை குறிப்பிட்ட வைகோ, தொண்டர்கள் யாரும் இது போன்ற முடிவை எடுக்கக்கூடாது. நாம் எப்போதும் உறுதியாகப் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் அமைந்தால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனி மக்களுக்கும், தமிழக மக்களும் துரோகியாகிவிடுவார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று காலை வைகோ செக்கானூரணியில் இருந்து இரண்டாம் நாள் நடைபயணத்தை துவங்கினார். அங்கிருந்து, கருமாத்தூர், செல்லம்பட்டி, வாலாந்தூர், குப்பணம்பட்டி வழியாக உசிலம்பட்டியில் இன்று இரவு தங்கி, அங்கு நடக்கும் விழிப்பு உணர்வு கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications