போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடையைத் திறப்பதா.. என்ன ஆணவம்.. வைகோ கொந்தளிப்பு
திருநெல்வேலி: வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வைகோ, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊர் கலிங்கப்பட்டி. இங்குள்ள டாஸ்டாக் கடையை அகற்றக்கோரி சனிக்கிழமை வைகோ தயார் மாரியம்மாள், தம்பி ரவிச்சந்திரன் உள்பட சுமார் 800 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று போலீசார் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறக்கபபட்டு அவை வழக்கம் போல் செயல்படுகின்றன். அடுத்த கட்ட போராட்டம் குறித்து வைகோவுடன் கலிங்கப்பட்டி மக்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் கலிங்கப்பட்டியில் டாஸ்டாக் கடை திறக்கப்பட்டுள்ளது. நேற்று மூடக்கோரி போராட்டம் நடந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார். கலிங்கப்பட்டியில் டாஸ்டாக் கடை மீண்டும திறக்கப்பட்டதை கண்டித்து எனது தலைமையில் இன்று ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்றார்.
மேலும், மதுவிலக்கு கோரி உயிர்விட்ட சசிபெருமாள் மகன், மகள் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. முழுமதுவிலக்கை தமிழகத்தில் ஏற்படுத்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. அதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வைகோ அழைப்பு விடுத்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications