ஐஐடி மெட்ராஸ்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் இராணி- வைகோ சாடல்
சென்னை: அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டத்திற்கு விதித்த தடையை வைகோ வன்மையாக கண்டித்துள்ளதுடன், மீண்டும், அதற்கு அனுமதியளிக்க வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் என்ற அமைப்பு ஐ.ஐ.டி.யின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது. அம்பேத்கர், பெரியார் கொள்கை கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் மாணவர்களிடையே கொண்டு சென்று ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் பணியை, அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு செய்து வருகிறது.

அனாமதேய கடிதம்
இந்த அமைப்புக்கு சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் திடீரென்று தடை விதித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மோடி அரசின் ஹிந்தி மொழித் திணிப்பு, மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முயற்சி மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் போன்றவற்றை அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு விவாதப்பொருளாக ஆக்கியதால், ஆத்திரமடைந்த சிலர் மத்திய அரசுக்கு அனாமேதேய புகார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஸ்மிருதி இராணி கடிதம்
உடனே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆணையின் பேரில் இத்துறையின் இணைச் செயலாளர் பிரிஸ்கா மேத்யூ, மே 15ம் தேதி சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். மே 24ம் தேதி சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம், அம்பேத்கர் பெரியாரிய சிந்தனைகளைப் பரப்பிய மாணவர் அமைப்பான ஏபிஎஸ்சிக்கு தடை விதித்துள்ளது.

பொய் சொல்லும் அமைச்சர்
ஆனால், அமைச்சர் ஸ்மிருதி இராணி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, அமைப்புக்கு தடை விதித்தது தனக்கு தெரியாது என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார். அம்பேத்கர்-பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்வதாகவும், பா.ஜ.க அரசின் செயற்பாடுகள் குறித்து கருத்துப் பரவல் செய்வதாகவும் ஐ.ஐ.டி. நிர்வாகம் கூறியுள்ளது.

தடை வாபஸ்
பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதும், அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளை பரப்புவதும், பெரும் குற்றம் என்பதுபோல ஐ.ஐ.டி. நிர்வாகம் சித்தரித்து மாணவர் அமைப்புக்கு தடை விதிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும். மக்களாட்சியில், அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படைக் கருத்து உரிமையை பறிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்பதை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உணர வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கி வரும் அம்பேத்கர்பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு மீதான தடையை உடனே திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications