சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதத்தை மத்திய அரசு வலிந்து திணிக்கிறது... விளாசும் வைகோ!
சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டு சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: சமஸ்கிருதத்தை கொண்டாடும் மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழி கற்றலை நீக்கி விட்டு சமஸ்கிருதத்தை கட்டாயப்படுத்துவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற அயல் மொழிகளை மூன்றாவது மொழியாக அனுமதிக்கக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தி இருக்கிறது. மாணவர்கள் விரும்பினால் அந்நிய மொழிகளை நான்காவது, ஐந்தாவது மொழியாகக் கற்றுக்கொள்ளட்டும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்போது, இந்தி, ஆங்கிலம் மற்றும் எட்டாவது அட்டவணையில் உள்ள இன்னொரு மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும். அந்நிய மொழிகளுக்கு இடம் இல்லை என்றும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கையில் அறிவுறுத்தி இருக்கிறது.

சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது
அந்நிய மொழிக்கு இடம் அளிக்கக்கூடாது என்ற பெயரால் சமஸ்கிருதத்தை வலிந்து திணிப்பதற்கான நடவடிக்கை இது என்பது அப்பட்டமாகத் தெளிவாகிறது. சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 18 ஆயிரம் பள்ளிகளில் தற்போது இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் எட்டாம் வகுப்புவரை ஜெர்மன் மொழி கற்றுத் தரப்படுகிறது.

பாஜகவின் முயற்சி
பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், 2014 அக்டோபரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு, சமஸ்கிருதத்தைக் கற்றுத்தர வேண்டும் என்று உத்தரவிட்டார். கணக்கு, அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலமும், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலமும், இந்தியும் பயிற்று மொழிகளாக உள்ளன.

பாடமொழி முறை
முதல் ஐந்து வகுப்புகளுக்கு பாட மொழிகளாக ஆங்கிலமும், இந்தியும் உள்ளன. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் அல்லது ஜெர்மன் என்று மூன்று மொழிகளும் பாட மொழிகளாக உள்ளன. ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் ஆங்கிலம், இந்தி அல்லது சமஸ்கிருதம் என்று இரண்டு மொழிகள் பாட மொழிகளாக உள்ளன. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கணிதப்பிரிவு எடுப்போருக்கு ஆங்கிலம் மட்டுமே பாடமொழி. பிற பிரிவுகளில் படிப்போருக்கு ஆங்கிலமும், இந்தியும் பாட மொழி.

மத்திய அரசு தீவிரம்
இந்நிலையில்தான் மத்திய அரசு ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு, சமஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்த எண்ணியது. சமஸ்கிருத மொழியில் ஆர்வம் இல்லாமல், வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஜெர்மன் மொழியைப் பயில மாணவர்கள் விரும்பியதால், கேந்திர வித்யாலயாப் பள்ளிகளில் ஜெர்மன் மொழி கற்றுத்தரப்படாது என்று பா.ஜ.க. அரசு உத்தரவு போட்டது. நாடு முழுவதும் இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஜெர்மன், பிரஞ்சு மொழியை அகற்றுவதின் மூலம் சமஸ்கிருத மொழியை நேரடையாகவே திணிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

கொண்டாடும் அரசு
ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே நாடு என்று இந்துத்துவாக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளிலும் பா.ஜ.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில், சமஸ்கிருதத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் போக்கை பா.ஜ.க. அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விருப்பத்திற்கு மாறாக
சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய அரசுப் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளை நீக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக வைகோ கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications