ஸ்டெர்லைட் சி.இ.ஓ நாவடக்கத்துடன் பேச வேண்டும்.. ஆலையே இருக்காது: வைகோ எச்சரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை சி.இ.ஓ. ராம்நாத்-த்துக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஸ்டெர்லைட் சி.இ.ஓ நாவடக்கத்துடன் பேச வேண்டும்-வீடியோ

    கோவை: ஸ்டெர்லைட் ஆலை சி.இ.ஓ ராம்நாத் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    vaiko condemns the sterlite plan ceo

    மஹாராஷ்டிராவில் ஸ்டெர்லைட் ஆலை உடைத்தபோது ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் ஏன் மும்பை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் செல்லவில்லை? வெளி நாட்டில் பணம் பெற்றுக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள், சமூக விரோதிகள், கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலையை நடத்துவோம் என பேசிய ஸ்டெர்லைட் சி.இ.ஓ. ராம்நாத் நாக்கை அடக்கி பேச வேண்டும் என்றார்.

    தமிழக அரசின் ஆணை நிற்காது என பல்வேறு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வட நாட்டவரை விட தென்னாட்டவர்கள் வீரமுள்ளவர்கள். ஆலையை ஓட்ட முடியாது. ஆலையே இருக்காது.

    ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளது. மோடி பாக்கெட்டில் ஸ்டெர்லைட் முதலாளியா அல்லது பணமா என்பது தெரியவில்லை. மத்திய அரசு திணித்த நீட் என்கிற மரண கயிறு தமிழக பிள்ளைகளின் கனவை சிதைத்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் வெளி நாடுகளில் புகழ்பெற்ற மருத்துவர்களாக உள்ளனர்.

    91.9% 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தமிழகம் நீட்டில் 34-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 65% தேர்ச்சி பெற்ற மற்ற மாநிலங்கள் நீட்டில் முன்னிலையில் பெற்றுள்ளனர். தமிழகத்தில் வளரும் பிள்ளைகளை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம்.

    இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+