ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டவர்களுக்கு வைகோ பாராட்டு!
சென்னை: சங்கரன்கோவில் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டவர்களுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணேசன்-தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் ஹர்சன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நிலை என்னவாகுமோ? என்று மிகவும் மனவேதனை கொண்டிருந்தேன்.

இதுபோன்ற சம்பவங்களில் மீட்புப் பணிக்கு உதவுவதற்காக நாலாட்டின் புத்தூர் மணிகண்டன் தாமே உருவாக்கி சீரமைத்த ரோபோ மற்றும் கேமரா கருவிகளின் துணையோடு சமூக அக்கறைகொண்ட தமது நண்பர்கள் திருநாவுக்கரசு, ராஜ்குமார், வல்லரசு ஆகிய தோழர்களின் திட்டமிட்ட செயல்பாட்டால், குத்தாலாப்பேரி சிறுவன் ஹர்சன் மீட்கப்பட்ட செய்தி அறிந்து மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
இப்பணியில் ஈடுபட்டு சிறுவனை மீட்ட நாலாட்டின்புத்தூர் மணிகண்டன் குழுவினருக்கும், மீட்புப் பணிக்கு உதவிய மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறையினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உளமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏதும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளின் உயிர் பறிக்கும் எமனாக விளங்கும் திறந்த நிலை ஆழ்குழாய்களை மூடி பராமரிக்க, ஆழ்குழாய் அமைப்போரும், சமூக அக்கறை உள்ள அனைவரும் முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications