சூடு பிடிக்கும் தேர்தல் களம்... கடலூரில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறது ம.ந.கூட்டணி !

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நல கூட்டு இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரம் நாளை கடலூரில் இருந்து தொடங்குகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

vaiko meets press people on today in chennai

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திராவிட கட்சிகளையும் ஊழலையும் ஒழிப்பதுதான் மக்கள் நலக் கூட்டணியின் முதல் பணி. வருகிற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.

எங்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தை விளக்கி தமிழகம் முழுவதும் பிரசாரம் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இன்று மாலை புதுச்சேரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. நாளை கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை பகுதிகளில் பிரசார விளக்க பயணம் நடைபெறும். மக்கள் நலக் கூட்டணி நம்பகதன்மை கூட்டணி. மக்கள் நலனை காக்க கூடிய கூட்டணி. எங்கள் கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+