புயலடித்து எத்தனை நாள் கழித்து மத்திய குழு வருவது?- வைகோ, ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி
புயலடித்து ஓய்ந்து பல நாட்கள் கழித்து மத்திய குழுவினர் வருவதா? ஏன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12ம் தேதியன்று சென்னையில் கரையைக் கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பல லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. 10 நாட்களுக்கும் மேலாக சென்னை மக்கள் தவித்து போயினர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ரூ. 22,500 கோடி ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்று பிரதமரை சந்தித்த முதல்வர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மத்தியக் குழு இன்றும் நாளையும் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவின் வசிஷ்டா தலைமையில் 9 பேர் அடங்கிய மத்தியக் குழு நேற்று இரவு சென்னை வந்தடைந்தது. இன்று காலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர்.
மத்திய குழுவினர் தாமதமாக சென்னை வந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எவ்வளவு நாட்கள் கழித்து மத்திய குழுவினர் வருவது என்று கேள்வி எழுப்பினார். அனைவரும் புகைப்படத்தை மட்டுமே பார்க்க வருகிறார்களா? சாய்ந்த மரங்களை அகற்றிய பின்னர் வந்து என்ன பயன் என்றும் வைகோ கேட்டார்.
மோடியை நேரில் சந்தித்த போது, பேரிடர் என்றால் உடனே உதவி செய்வேன் என்று கூறினார். அவர் செய்வார் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் வைகோ தெரிவித்தார்.
இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், புயலில் சாய்ந்த மரங்களை எல்லாம் அகற்றிய பின்னர் மத்திய குழுவினர் வருவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கேட்ட ரூ. 22.500 கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications