மதிமுக ஈரோடு நகரச் செயலாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்: வைகோ நடவடிக்கை
சென்னை: ஈரோடு நகர செயலாளர் ஆர்.பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.நீதிராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கணபதி பாண்டியன் ஆகியோரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு மதிமுகவில் இருந்து சில மாவட்டச் செயலாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள் பலர் விலகி திமுகவில் இணைந்தனர். இன்னும் பலர் திமுகவிற்கு தாவுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் வைகோ.

இதுதொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை, மதிமுகவின் ஈரோடு மாவட்டம், ஈரோடு நகரச் செயலாளர் ஆர். பொன்னுசாமி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியச் செயலாளர் கே. கணபதி பாண்டியன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் எஸ். நீதிராஜ் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அவர்கள் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications